வருடுவதில்லை அதனை அனுபவிக்கும் வரை !
நாம் மண்ணில் அவதரித்தபோது நல்லவர்கள்,
வாழ்க்கையை கையில் ஏந்தி நடத்தும் போது வல்லவர்கள்,
வல்லவர்களாய் மாயும் போது நம் வாழ்வியல் சரித்திரமாகும் !
வாழுகின்ற வாழ்க்கை சரித்திரமாகட்டும்
இருவர் மட்டும் கொள்கையே மனிதனின்
உள்ளங்களை வருடிச் செல்லட்டும் !
காலம் பொன் போன்றது கூற்று மாறட்டும்
நாம் பொன் போன்றவர்கள் என்ற நிலை மலரட்டும் !
இனிய வாழ்வு நடத்த
அரிச்சந்திரனாய் வாழ ஆசைப்படுங்கள்
ரோஜாவில் தோன்றும் முட்களாய் இராமல்
அதனைச் செதுக்கிய பனித்துளியாய் வாழ்ந்து காட்டுங்கள் !
வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமாகட்டும் !
தவறுகள் பல
மன்னிப்புகள் சில
கவலையின்றி மகிழ
காலத்தோடு ஒட்டி வாழ
கைகொடுப்போம் ஆதரவற்றவர்களுக்கு !

No comments:
Post a Comment